சித்ரா பௌர்ணமி பூஜை:

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்

சித்ரா பௌர்ணமி குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுகிறது, இருப்பினும் இந்த நாளில் ஆண்களும் பூஜை செய்யலாம். பெண்கள் குளித்த பின், தங்கள் வீட்டின் நுழைவாயிலை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு, கடவுளை அலங்கரிப்பார்கள். அதன் பிறகு கடவுளை வணங்க வேண்டும். இப்படி வணங்குவதால் குழந்தை பாக்கியம், திருமண வரம் மற்றும் உங்களின் ஏழு தலைமுறையையும் காக்கும் என நம்பப்படுகின்றது.

Leave a comment